தமிழகம்

தமிழ்நாட்டில் இந்த 3 கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்..!!

56views

கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!