தமிழகம்

சென்னையில் நாளை நம்ம ஊரு திருவிழா – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

82views

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை (மார்ச் 21 ஆம் தேதி) ‘நம்ம ஊரு திருவிழா நடைபெறும்’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.மேலும்,இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி,நாளை சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்த நிலையில்,தற்போது இவ்விழா நடத்தப்படுகிறது.

மேலும்,நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் பிற மாவட்டங்களில் படிப்படியாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலை பண்பாட்டுத்துறை,பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க சுற்றுலாத்துறை சார்பில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!