செய்திகள்தமிழகம்

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் அச்சப்படத் தேவையில்லை: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

37views

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும்மக்களவைத் தேர்தலுக்குள் வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டியது அவசியம். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் 5 மாநில முதல்வர்கள், 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றது, அதற்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் குறித்து நல்லவிதமாக கருத்து கூறியதை வரவேற்கிறேன்.

கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இல்லையெனில் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. புலனாய்வுபோலீஸார் எத்தனை முறை விசாரித்தாலும் தங்களை அவ்வழக்கில் இணைக்க முடியாது என்றுஅவர்கள் தைரியமாக சொல்லலாமே. ஏன் பயப்படுகின்றனர்? விசாரிப்பதற்கான தேவை இருப்பதாக அரசு கருதினால் அவர்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!