தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

75views

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப்பதவி யேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச்சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக வழங்கத்தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ரூ2000 வழங்கும் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வழங்கப்படும், ரூ,2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் தொடங்க உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!