Sunday, September 29, 2024
தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டம் !!

30views
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு யாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறையினர் மரியாதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பின்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காட்பாடி தாசில்தார் அலுவலகம் எதிரில் தேசிய கொடியை ஏற்றி வைத்த தாசில்தார் ஜெகதீஸ்வரன் மரியாதைசெலுத்தினார். வருவாய்துறையினர் பங்கேற்றனர். காட்பாடி சார் – பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் சார் – பதிவாளர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின் இனிப்பு வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
error: Content is protected !!