தமிழகம்

வேலூர் அரியூரில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக் கொலை ! அதிரடியாக 5 பேரை கைது செய்த காவல்துறை !!

406views
வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி நகரை சேர்ந்தவன் பிரபல ரவுடி எம்எல்ஏ ராஜா (42). இவன் மீது கொலை மற்றும் வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு அரியூர் ரோட்டில் இருந்து தனது பைக்கில் சென்று கொண்டு இருந்த போது, எதிரில் வந்த கார் மோதியதில், ராஜா கீழே விழுந்தான். உடனடியாக காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் சரமாரியாக வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி ஓடியது.  சம்பவ இடத்தில் ராஜா இறந்தான்.
உடனடியாக தகவல் அறிந்த வேலூர் எஸ். பி. மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.  டி. எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் தீவிர வாகன சோதனை செய்தனர்.  வேலூர் வல்லம் டோல்கேட் பகுதியில் காரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் 5 பேர் இதில் சம்மந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.  ரவுடி ராஜாவுக்கும் இவர்களுக்கும் யார்? பெரிய ரவுடி என்ற பிரச்னை இருந்து உள்ளது. இவர்களை ராஜா கொல்வதற்கு முன் முந்திக்கொண்டு திட்டமிட்டு இந்த கொலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.  முழு விசாரணையில் கொலையாளிகளான அரியூரை. சேர்ந்த ரவுடிகள் தேஜாஸ் (23), அஜித்குமார் (23), ராஜேஷ் (23), சந்துரு (23) கார்த்திகேயன் (25) ஆகிய 5 பேரை உடனடியாக கைது செய்து கோர்ட்டின் மூலம் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!