தமிழகம்

வேலூரில் நாட்டை காப்போம் கூட்டமைப்பின் சார்பில் பரப்புரை மற்றும் கலைப்பயணம் குறித்த ஆலோசனைக்கூட்டம்

245views
வேலூர்பில்டர் பெட்ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ ஹாலில் நாட்டைக் காப்போம் என்ற நிலையில் தமிழகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் கலைப்பயணத்தை மேற்கொள்வது என்றும் இதில் சென்னை, வேலூர்,நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, உதகை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டு அக்டோபர் 2-ம் தேதி புறப்பட்டு, 17-ம் தேதி உலக வறுமை தினத்தன்று மதுரையில் நிறைசெய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.  இதில் வேலூர் மண்டல பொறுப்பார் ஐசக் கதிர்வேல், வேலூர் மாவட்ட வி.சி.க.செயலாளர் பிலிப், மண்டல பொறுப்பாளர்கள் ஏசுபாதம், செந்தமிழ்செல்வி, வழக்கறிஞர்கள் பாஸ்கரன், கென்னடி, காங்.ஓ.பி.சி.மாநில துணைத்தலைவர் ரவி, காங்.மாநகர தலைவர் நோபல்லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல அமைப்பினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!