செய்திகள்தமிழகம்

இராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பி .எம் .எஸ் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

59views

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை 1 முன்பு பாரதிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இராஜபாளையம் பணிமனையில் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பேண்டஜ் முறை வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறை படுத்தாத மண்டல நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 8 மணி நேர பணியினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் பேண்ட்ஜ் முறையில் ஓட்டுநர் நடத்துபவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவைச் செயலாளர் பாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மண்டல தலைவர் நாராயணசாமி கிளை சங்கத் தலைவர் பழனி இராஜபாளையம் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர் மேலும் ஆளுங்கட்சி சேர்ந்தவர்களுக்கு சாதகமாக பணி வழங்கப்படுவதாகவும் மற்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படடுஙகாக குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!