தமிழகம்

நில உரிமையாளரை இடத்தில் நுழைய விடாமல் கொலை மிரட்டல் விடும் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு.

34views
தேனி மாவட்டம், கொடுவிலார் பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, சின்னராஜ் என்பவர் வாங்கிய இடத்திற்கு செல்லவிடாமல், தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி ஜெயம் நகரில் குடியிருக்கும் குணசுந்தரி, ரேணுகா இருவருக்கும் கொடுவிலார்பட்டி சர்வே எண் 371 / 2 அமைந்துள்ள தரிசு நிலத்தை சின்னராஜ் விலைக்கு விற்பனை செய்து விட்டனர்.
சின்னராஜ் வாங்கிய நிலத்தில் உள்ள கருவேல மரங்களை கடந்த 6-8 – 2022 அன்று வெட்டி அகற்ற சென்றார்.  அப்போது சமதர்புரத்தை சேர்ந்த ரவீந்திரன் ஆசிரியர் அங்கு வந்து, தனது இடத்தில் கருவேமாங்களை அகற்ற முயன்ற சின்னராஜ் என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி, உன்னை வெட்டி கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டினார்.
இது குறித்து பிசி பட்டி காவல் நிலையத்தில் சின்னராஜ் புகார் தெரிவித்தார்.
உடனடியாக காவல் துறையினர் ஆசிரியர் ரவீந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!