செய்திகள்தமிழகம்

சோழவந்தானில் அதிமுக ஒ. பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்..

43views

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மஹாலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம், அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம் என்ற வீரபத்திரன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அவர் பேசும்போது கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய ஐயா பன்னீர்செல்வம் தான் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவே பல்வேறு கூட்டங்களில் பேசும்போது விசுவாசத்தின் எடுத்துக்காட்டே அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று கூறினார் கடந்த வாரம் நடைபெற்ற பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜை விழாவில் ஐயா கலந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மா எவ்வாறு தங்க கவசம் வழங்கினாரோ அதே போன்று ஐயாவும் வெள்ளி கவசம் மற்றும் ருத்ராட்ச மாலையினை தேவர் திருமகனாரின் அறக்கட்டளையின் அறங்காவலர் அம்மா காந்தி மீனாவிடம், வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார் புரட்சித்தலைவி அம்மா எவ்வழியில் மக்களுக்காக வாழ்ந்தாரோ அதேபோன்று ஐயா ஓபிஎஸ் அவர்கள் கழக தொண்டர்களுக்காக வாழ்ந்து வருகிறார் என்று கூறினார்

இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வுக்கான மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேட்டை விஜயன் புல்லட் மகேந்திரன் கல்லானை மன்னாடி மங்கலம் தங்கபாண்டி வக்கீல் முருகன் டீக்கடை ராஜேந்திரன் மார்க்கெட் ராஜேந்திரன் முத்து பால்பண்ணை ராஜேந்திரன் கட்டக்குளம் வேலுச்சாமி மன்னாடிமங்கலம் நாகஜோதி மேலக்கல் ஆடியராஜா பாலகிருஷ்ணாபுரம் ஈஸ்வரன் நாகஜோதி திருமால் நத்தம் தண்டபாணி மன்னாடி மங்கலம் செல்லம். கீழ மட்டையான் விஜயன்.உட்பட சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்,.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!