மதுரை அண்ணா நகர் ,வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை அடுத்து, பெருமாளுக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத் திருக்கோவிலில் ,ஆடி பௌர்ணமி முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் ,மஞ்சள் பொடி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .
இதில் ,பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது. இதேபோன்று, மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமி முன்னிட்டு, அம்மனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதே போன்று, மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடிப் பவுர்ணமி முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
இதை அடுத்து சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர். ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு, மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் வந்தனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.