சினிமா

அ. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் “இரவினில் ஆட்டம்”

569views
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அவர்களை தவறான விதத்தில் வீடியோ எடுத்து பணம் பார்க்கும் மர்ம கும்பல் ஒன்று, அந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடாமல் இருக்க பெற்றோரை பணம் கேட்டு மிரட்டி அடாவடித்தனம் செய்கின்றனர். பணம் தர மறுக்கும் குழந்தைகளின் பெற்றோரை கொலை செய்தும் விடுகின்றனர். இதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அவர்களது குழந்தையும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் குடும்பத்தை இழக்கும் ஹீரோ, அந்த மர்ம கும்பலை கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகிறார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர், க்ரைம் கலந்து சொல்லி இருக்கும் இருக்கும் திரைப்படம் தான் “இரவினில் ஆட்டம்”. திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் அ தமிழ்செல்வன்.

கதாநாயகனாக உதய், கதாநாயகியாக கிரேசி இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், மஸ்காரா அஸ்மிதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைக்கிறார் நல்லதம்பி, பாடல்களை கவிஞர் செல்வராஜா எழுதி இருக்கிறார். ஒளிப்பதிவு : ஜினோபாபு, படத்தொகுப்பு: முத்துக்குமார் , சண்டை பறிச்சி: ஹரி முருகன், நடனம்: ஸ்டைல் பாலா, டிசைன்ஸ்: ஆர் கே வெங்கட், மக்கள் தொடர்பு: சக்தி சரவணன் இப்படி பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கெடுத்துள்ள இந்த திரைப்படத்தை RSV மூவிஸ் சேலம் R சேகர் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது “இரவினில் ஆட்டம்”

Right Click & View Source is disabled.

error: Content is protected !!