தமிழகம்

மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.

257views
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக நாட்டின் தேசிய கொடி,195 நாட்டின் பெயர், அந்த நாட்டின் கரன்சியின் பெயர், இந்தியா மாநிலங்களின் பெயர்கள், சுதந்த போராட்ட வீரர்களின் பெயர்கள் என சொல்லி அசத்தும் ஒன்றரை வயது சிறுமி மதுராந்தகியின் திறமை பார்த்து இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
அடுத்த முயற்சியாக சிறுமியை கின்னஸ் ரெக்கார்டிற்கு தயார் படுத்தி வருவதாக கூறும் பெற்றோர் ஒன்றே கால் வயதிலே புரூட்ஸ், வெஜிடேபிள் பெயர்களை சொல்ல ஆரம்பித்தாகவும், அவளின் திறமையை பார்த்து உலக தலைவர்களின் போட்டோஸ், உலக நாடுகளின் டம்மி கரன்சி வாங்கி கொடுத்து அவற்றின் பெயர்களை சொல்ல வைத்தோம் என்றும், பள்ளிக்கு செல்லும் முன்னரே அவள் அவார்டு வாங்கியது பெருமையாக இருக்கிறது என்ற சிறுமியின் அம்மா சுதர்சனா.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!