மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன். மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும்...