தமிழகம்

தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி...
தமிழகம்

முழு முடக்கத்தால் இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊர் செல்லும் மக்கள்!

நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முடக்கங்ளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி. மின் வணிக நிறுவனங்கள் மூலம் பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவை மதியம் 12 மணி வரை விநியோகிக்க அனுமதி. மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில்...
தமிழகம்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும் விதமாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யும் இயந்திரந்தில், பல இடங்களில் கைரேகைகள் சரிவர பதிவாகவில்லை. இதனால், ஆதார் அட்டையில் மீண்டும் கைரேகையை பதிவுசெய்து கொண்டு வரும்படி ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆதார் மையத்தில் கைரேகையை பதிவு செய்யச் சென்றால், அதற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு மீண்டும் ரேஷன்...
தமிழகம்

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான 'கல்தூண்' என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார். அன்று முதல் இவரை சினிமாவில் பலரும் 'கல்தூண்' திலக் என்றே அழைக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'பேர் சொல்லும் ஒரு பிள்ளை', 'வெள்ளிக்கிழமை விரதம்' போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்தார். தமிழ் சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கல்தூண் திலக், பெரும்பாலும் வில்லன் வேடங்களையே ஏற்று நடித்தார்....
தமிழகம்

அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம் – ஒபிஎஸ் குற்றச்சாட்டு

அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வென்றுள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்துள்ளது. அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாக்குவாதம் நடைபெற்றுள்ளது. முடிவில் எந்தவித முடிவும் எடுக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கு தான் என மெரினாவில் கோஷம் எழுப்பினர். தேர்தல் தோல்வி தொடங்கி ஒருவருக்கு ஒருவர் இரு தரப்பினரும் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக...
தமிழகம்

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்கொல்லாம் அனுமதி

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 10 -ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை...
தமிழகம்

கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.கடந்த 2020, ஜனவரி மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து 520 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. 74 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது, உள்நாட்டு விமானங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலும் பயணிகள் விமான சேவையை தவிர்த்தனர். தற்போது கொரோனாவின் 2வது அலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மருத்துவமனைகளில் இட பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்...
தமிழகம்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஷில்பா பிரபாகரன் சதீஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக எம். எல் .ஏக்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்றைய தினத்தில் அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குதல், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் பொதுமக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும், நாளை முதல் மகளிருக்குப் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படாது போன்ற முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து...
தமிழகம்

ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே தற்போது உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் தற்போது மிக முக்கியமான கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உருவாக்கப்படும் ஆக்ஸிஜன் 25 டன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றும், பாலக்காட்டில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்னும் வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சனிக்கிழமையன்று போதுமான அளவில் ஆக்ஸிஜன் வழங்க முடியாது என்று தமிழகத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மத்திய அரசு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் தமிழக அரசின் ஆக்ஸிஜன் தேவை அளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இது வெள்ளிக்கிழமைக்குள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் சனிக்கிழமையில் இருப்புக்கள் வழங்கப்படுவதைப் பற்றி அதிகாரிகள் பேசும் அவசரநிலை...
தமிழகம்

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என கூறி முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின்..!

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க ஸ்டாலின் 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை...
1 433 434 435 436 437 440
Page 435 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!