தமிழகம்

தமிழகம்

அதிரடி! 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது, விரைவில் 120 உழவர் சந்தைகள்!!

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது என்றும், விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில் அவற்றை சரியாக பராமரிப்பதுடன் தமிழகத்தில் 120 க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். ' அட்மா ' திட்டத்தில் பணி செய்த வேளாண் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்தி பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், புதிய...
தமிழகம்

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை !!

கொரோனா ஒருபக்கம் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் மறுபக்கம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கோடை வெயிலும் கொளுத்துவதால் மக்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் அறிவிப்பில் , தென்கிழக்கு அரபிக் கடலில் 14 ஆம் தேதி , காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது . புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து , கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக , தென் தமிழகம் , கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் "காய்கறி,மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம். ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம். தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயலாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் அமைக்கப்படும். சென்னையில் உள்ள தொழில்வழிகாட்டி மைய அலுவலகத்தில்...
தமிழகம்

ஊரடங்கு காலத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அம்மா உணவகத்துக்கு எம்எல்ஏ நிதி உதவி

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டி, மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கின் போது பொதுமக்கள் இங்கு இலவசமாக உணவு உட்கொள் ளும் விதமாக காலை, இரவு சிற்றுண்டியும், மதியம் இரண்டு வகை உணவும் வழங்கத் தேவையான நிதியை கும்ப கோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நகராட்சியில் செலுத்தியுள்ளார். இதையடுத்து, கும்பகோணம் அம்மா உணவகத்தில் நேற்று மதியம் பொதுமக்களுக்கு இலவ சமாக உணவு வழங்குவதை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்ப ழகன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி, திமுக கும்பகோணம் நகரச் செயலாளர் சு.ப.தமிழழகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.லோகநாதன், சின்னை பாண்டியன், செந்தில், செல்வம், நகர திமுக துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்....
தமிழகம்

“அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்!” – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்த போது, 'ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் தேர்வு நடத்த திட்டமித்துள்ளோம். தேர்வுக்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் தேர்வு எழுதலாம். அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு நடைபெற்ற தேர்வில் சுமார் 4.25 லட்சம் பேர்...
தமிழகம்

கைரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வரிசையாக மக்கள் கைரேகை வைக்கும் போது அதன் மூலமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புண்டு என்பதால் தற்காலிகமாக அதை நிறுத்தி வைக்க வேண்டும் என நியாயவிலைக் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2000 ரூபாய் மே 15 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப்போக்க நில நிர்வாகக்கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டிஆகியஅரசு உயர் அலுவலர்களை  நேரடியாக  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கண்ணப்பர் திடல் சமூக நலக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அப்பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவித்து அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு தமிழக அரசுஅறிவித்தது. இந்தநிலையில், ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அவசரகால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. மேலும், 9498181236, 9498181239 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல் துறையின் உதவியை நாடலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப்பதவி யேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச்சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக வழங்கத்தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ரூ2000 வழங்கும் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கிவைக்கிறார். இந்நிலையில் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வழங்கப்படும், ரூ,2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் தொடங்க உள்ளது....
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வை கோதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இது சமம்ந்தமாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழுபேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக வேமனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோல வேநளினி, ரவிச்சந்தின், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தும் ஆளுநர் அந்தக்கோரிக்கையை...
1 432 433 434 435 436 440
Page 434 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!